• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

எக்ஸ் (டிவிட்டர்) நாட்டின் சட்டங்களை மீறுவதாக இந்திய அரசு குற்றச்சாட்டு – என்ன நடந்தது?

Byadmin

Sep 18, 2023


எக்ஸ் (டிவிட்டர்) நாட்டின் சட்டங்களை மீறுவதாக இந்திய அரசு குற்றச்சாட்டு – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எக்ஸ்(டிவிட்டர்) நிறுவனம் அரசு விதிமுறைகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இப்போது எக்ஸ் என அறியப்படும் டிவிட்டர் அரசு விதிமுறைகளை மீறிச் செயல்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

“எக்ஸ் இந்த நாட்டின் சட்டங்களைப் பின்பற்றுவதில்லை,” என்றும் சட்டம், நீதித்துறை மற்றும் அதிகாரிகளை கேவலமாகப் பார்ப்பதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எக்ஸ் சமூக ஊடக நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு விளக்கமளித்த மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கத்திற்கு எக்ஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை.

எக்ஸ் நிறுவனத்தின் மீதான வழக்கு என்ன?

டிவிட்டர் கணக்குகள் சிலவற்றைத் தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், ஓராண்டாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத காரணத்திற்காக ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது.

By admin