• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

ஓடும் ரயிலில் செல்வந்தரை கொன்றது யார்? அடுத்த பெட்டியில் பயணித்த நடிகை மீது சந்தேகம்

Byadmin

Sep 16, 2023


ஓடும் ரயிலில் செல்வந்தர் கொலை

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் பழைய கொலை வழக்குகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் போட் மெயில் கொலை வழக்கு கட்டாயம் பேசப்படும். ஆனால், போட் மெயில் கொலை வழக்கு என்ற பெயரில் இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று ஆளவந்தார் கொலை வழக்கு. இன்னொன்று, செல்வந்தர் ஒருவர் ரயிலில் கொல்லப்பட்ட வழக்கு.

சரியாகப் பார்த்தால், இந்தக் கொலை போட் மெயிலில் நடந்த கொலையல்ல. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் ரயிலில் நடந்த கொலை இது. இருந்தபோதும் இந்த வழக்கிற்கு ஏனோ போட் மெயில் கொலை வழக்கு எனப் பெயர் வந்துவிட்டது.

1940களின் மத்தியப் பகுதி. மதுரை ரயில் நிலையம். திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட திருவனந்தபுரம் – சென்னை மெயில் அப்போதுதான் அங்கு வந்து நின்றிருந்தது. தேவகோட்டையைச் சேர்ந்த பிரபலமான வங்கியாளர் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்தார்.

இந்த ரயில் அதிகாலை ஐந்து மணியளவில் செங்கல்பட்டை வந்தடைந்தபோது அந்த பணக்காரர் ரத்தவெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டுக் கிடந்தார். இவருடன் யாரும் பயணம் செய்யவில்லை என்பதால், யார், எதற்காகக் கொலை செய்தார்கள் என்பதெல்லாம் உடனடியாகப் புரியவில்லை.

By admin