• Tue. Mar 21st, 2023

24×7 Live News

Apdin News

வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் பட்டறைத் தொழில் இயங்க முடியாதா? – கள நிலவரம் என்ன?

Byadmin

Mar 19, 2023


வட மாநில தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களை மையப்படுத்தி சமீபத்தில் எழுந்த பொய் செய்திகள் தொடர்பான சர்ச்சைகளின் எதிர்வினை அனைத்து துறைகளிலும் உணரப்படுகின்றன. கோவையின் முகமாக திகழும் ஃபவுண்டரி (Foundry) பட்டறை துறையிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

கோவையின் தொழில் வளர்ச்சியில் பங்கு

தமிழ்நாட்டின் உற்பத்தி தலைநகரமாக அறியப்படுவது கோவை மாவட்டம். சென்னைக்கு அடுத்தபடியாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் கோவை இருந்து வருகிறது. பொறியியல் உற்பத்தி, பம்பு செட், ஆலை, ஜவுளி துறைக்கு நிகராக ஃபவுண்டரி துறையும் கோவையின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டின் பிரதான துறைகளான ஜவுளி, கட்டுமானம் போலவே ஃபவுண்டரி துறையிலும் வட மாநில தொழிலாளர்களின் பங்கு கனிசமாக உள்ளது. ஆனால் அவர்களை வேலைக்கு அமர்த்துவது, அவர்களின் ஊதியம் தொடர்பாக பரவும் செய்திகளில் உண்மை இல்லை என அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கோவையில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் எனப் பல்வேறு நிலைகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஃபவுண்டரி தொழிலகங்கள் கோவையில் இயங்கி வருகின்றன. பம்பு செட், ஆட்டோ மொபைல், வேளாண் இயந்திரங்கள் போன்றவற்றின் பாகங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமில்லாமல் ஏற்றுமதியிலும் ஃபவுண்டரி துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.