சென்னை: விமானம் மற்றும் கிரீன் காரிடர் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு 2 மணி நேரத்தில் இதயம் கொண்டு வரப்பட்டது.
மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரின் இதயத்தை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிவு செய்யப்பட்டது.