• Tue. Dec 9th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுக்கு அகதியாக செல்ல விரும்பும் வெள்ளை தென்னாப்பிரிக்கர்கள் – என்ன காரணம்?

Byadmin

Dec 9, 2025


தென் ஆப்ரிக்கா, நிறவெறி, ஆஃப்ரிகானர்
படக்குறிப்பு, மார்தினஸ் தனது குடும்பத்தின் பாதுகாப்புக்கு பயந்து அமெரிக்கா செல்ல விண்ணப்பித்துள்ளார்

4 மீட்டர் (13 அடி) உயரமுள்ள மின்சார எஃகு வாயில்கள், மேலே கூர்முனைகளுடன், மெதுவாகச் சத்தம் எழுப்பி திறக்கின்றன. மார்தினஸ் என்ற விவசாயி தனது பிக்-அப் வாகனத்தில் அந்த வாயிலைக் கடந்து செல்கிறார். நுழைவாயிலில் உள்ள கேமராக்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்கின்றன. பண்ணையைச் சுற்றி எங்கும் முள்வேலிகள் சூழ்ந்துள்ளன.

இப்பகுதி தென்னாப்பிரிக்காவின் மையப்பகுதியில் உள்ள கிராமப்புற ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ளது.

வாயில்கள் அவருக்குப் பின்னால் சத்தம் எழுப்பிக்கொண்டே மூடும்போது, “இது ஒரு சிறைச்சாலையைப் போன்ற உணர்வு தருகிறது,” என்று அவர் கூறுகிறார். “அவர்கள் வந்து எங்களைக் கொல்ல விரும்பினால் அவர்களால் அதைச் செய்ய முடியும். ஆனால் குறைந்தபட்சம் என்னிடம் வந்து சேர அவர்களுக்கு நேரம் எடுக்கும்” என்கிறார் மார்தினஸ்.

தென்னாப்பிரிக்காவில் வாழும் வெள்ளையினத்தவரான அவர், தனது மனைவி மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் பண்ணையை நிர்வகிக்கிறார். அவருக்கு தாக்குதல் குறித்த பயம் அதிகம் உள்ளது. மார்தினஸ் தனது முழுப் பெயரையும் வெளிப்படுத்த விரும்பவில்லை.

அவரது தாத்தாவும், அவரது மனைவியின் தாத்தாவும் பண்ணை மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள். 21 வயது பண்ணை மேலாளர் பிரெண்டன் ஹார்னரின் உடல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு, கழுத்தில் கயிற்றால் சுற்றப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் தான் அவர் வசிக்கிறார்.

By admin