• Tue. Dec 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா மீது புதிய வரி விதிக்க அமெரிக்கா திட்டமா? அரிசி பற்றிய டிரம்ப் பேச்சால் அச்சம்

Byadmin

Dec 9, 2025


அமெரிக்கா - இந்தியா, டொனால்ட் டிரம்ப், ரஷ்யா

பட மூலாதாரம், ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty Images

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையில் விவசாயிகளின் சூழல் குறித்த விவாதத்தின் போது டொனால்ட் டிரம்ப் இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை இரவு, வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்டிடம், “இந்தியா தொடர்ந்து தனது அரிசியை அமெரிக்காவில் கொட்டுகிறது. இதற்கு ஏன் அனுமதி அளிக்கப்படுகிறது? இதற்கு அவர்கள் கட்டாயம் சுங்கவரி செலுத்த வேண்டும். அரிசி மீதான வரிகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறதா?” என்று கேட்டார்.

அதற்கு ஸ்காட் பெசன்ட், “இல்லை. நாங்கள் இன்னும் அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய டிரம்ப், “ஆம், ஆனால் அவர்கள் தங்கள் அரிசியை இப்படி இங்கு அனுப்ப முடியாது. இதைச் செய்ய அவர்களை அனுமதிக்க முடியாது” என்றார்.

அமெரிக்க விவசாயிகளின் நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்ற விவாதம் நடந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்காட் பெசன்ட் ஆகியோருக்கு இடையே இந்த உரையாடல் நடந்தது.

இதற்கிடையில், பிற நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த சுங்கவரிகளால் கிடைக்கும் வருவாயில் இருந்து 12 பில்லியன் டாலர் அமெரிக்க விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார்.

By admin