• Sat. Sep 28th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை: தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் ஜனாதிபதி அநுர குமாரவிடம் எதிர்பார்ப்பது என்ன?

Byadmin

Sep 27, 2024


“புதிய ஜனாதிபதி எங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்” தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள் கண்ணீருடன் கோரிக்கை

பட மூலாதாரம், PRABHU RAO ANANDAN

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்கவின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும், என்று தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், “பொருளாதார நெருக்கடியின்போது தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளைத் திருப்பி அனுப்புவது பற்றி இலங்கைத் தூதரகம் மூலம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்,” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, புதிதாகப் பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க மீது இந்திய மீனவர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக இந்திய மீனவர்கள் கூறுகின்றனர்.

By admin