• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

ஒரே வீட்டை 28 பேருக்கு வாடகைக்கும், குத்தகைக்கும் விடுவதாகக் கூறி மோசடி

Byadmin

Nov 13, 2025


வீடு மோசடி, குத்தகை மோசடி, சென்னை, வாடகை மோசடி
படக்குறிப்பு, வீடு மோசடி வழக்கில் கைதாகியுள்ள ஸ்ரீவத்ஸ்

சென்னை போரூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்றை குத்தகைக்கும் வாடகைக்கும் விடுவதாகக் கூறி, பலரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஒரு நபரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது முதல்முறையில்லை. இதிலிருந்து தப்புவது எப்படி?

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை குத்தகைக்கு விடுவதாகக் கூறி, ஆன்லைன் தளங்களில் விளம்பரம் வெளியிட்டு, பலரிடமும் பணத்தை வசூலித்த நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னையில் போரூக்கு அருகில் உள்ள பெரிய பணிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸ். இவர் தனக்குச் சொந்தமான வீடு ஒன்று கெருகம்பாக்கத்தில் இருப்பதாகவும் அந்த வீட்டை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடவிரும்புவதாகவும் ஆன்லைன் செயலிகளிலும் சமூக வலைதளங்களிலும் விளம்பரம் செய்தார்.

இதையடுத்து அந்த வீட்டை குத்தகைக்குப் பெறுவதற்கும் வாடகைக்குப் பெறுவதற்கும் என பலர் ஸ்ரீவத்ஸை அணுகியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சில லட்சங்களைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருக்கிறார் ஸ்ரீவத்ஸ்.

இவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களில் ஆட்டோ ஓட்டுநரான பவானி ஆனந்த்தும் ஒருவர். என்ன நடந்தது என்பது குறித்து பவானி ஆனந்தின் உறவினரான மணி விரிவாக விளக்கினார்.

By admin