• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

கடலுக்கடியில் மறைந்திருக்கும் அபாயம் – நீருக்கடியில் உள்ள எரிமலைகள் வெடித்தால் என்னவாகும்?

Byadmin

Jul 19, 2025


நீருக்கடியில் உள்ள சில எரிமலைகள் விரைவில் வெடிக்க வாய்ப்புள்ளதா ?

பட மூலாதாரம், Dana Stephenson/Getty Images

படக்குறிப்பு, பல ஆண்டுகளாக பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டத்துக்கு மேலே காணக்கூடிய பல எரிமலை வெடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீருக்கடியில் உள்ள எரிமலைகள், பொதுவாக கண்ணுக்குத் தெரியாததால், பலர் அவற்றை மறந்துவிடலாம்.

ஆனால், விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கைகள் சிலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. நீருக்கடியில் உள்ள எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்பதே அந்த எச்சரிக்கையின் முக்கிய அம்சம்.

அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் இருந்து 300 மைல் தொலைவில் உள்ள ஆக்சியல் சீமவுண்ட் எரிமலை குறித்து, அவ்வாறு ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெப்பமடைந்து வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் வெடிக்கும் அறிகுறிகளை காட்டுவதாகவும், நிபுணர்கள் கூறுகின்றனர்.

By admin