• Sun. Nov 2nd, 2025

24×7 Live News

Apdin News

கட்சி மாநாட்டுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு தெரியும் – சொல்கிறார் கிருஷ்ணசாமி | krishnasamy about his political stance

Byadmin

Nov 2, 2025


புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் 7-வது மாநில மாநாடு மதுரை​யில் வரும் ஜன. 7-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இந்த மாநாடு குறித்து விளக்​கு​வதற்​காக​வும், கிராம மக்​களின் பிரச்​னை​களைத் தெரிந்​து​கொள்​ள​வும் கடந்த 4 மாதங்​களாக, தமி​ழ​கத்​தில் கிரா​மங்​கள்​தோறும் சென்​றேன். கடந்த மாதத்​தில் திருநெல்​வேலி, திண்​டுக்​கல் ஆகிய மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டேன். கிரா​மங்​களில் இருக்​கக்​கூடிய பிரச்​னை​கள் அதிர்ச்சி மற்​றும் வேதனை அளிக்​கக்​கூடிய​தாக இருந்​தன. நெல்லை மாவட்​டத்​தில் தேவேந்​திரகுல​வேளாளர் மக்​கள் வாழும் 60-க்​கும் மேற்​பட்ட பகு​தி​களில் பாது​காக்​கப்​பட்ட குடிநீர், சாக்​கடை உள்​ளிட்ட வசதி​கள் செய்து கொடுக்​க​வில்​லை. இதே​போல, திண்​டுக்​கல் மாவட்​டத்​தி​லும் 40 சதவீதம் வேளாண் தொழிலில் ஈடு​படும் தேவேந்​திரகுல வேளாளர் மக்​களுக்கு பாசன​வச​திக்கு வைகை நதி நீர் கொடுக்​க​வில்​லை.

தேவேந்​திர குல வேளாளர்​கள், ஆதி​தி​ரா​விடர், அருந்​த​தி​யர், சிறு​பான்​மை​யினர் வாழும் பகு​தி​யில் குடிநீர் வசதி செய்​ய​வில்​லை. இவர்​கள் திட்​ட​மிட்டு ஊராட்சி மன்​றங்​களால் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளனர். இது மனித உரிமை மீறலாகும். எனவே, இந்த மக்​களுக்கு அடிப்​படை வசதி செய்து தரக் கோரி நவ.20-ம் தேதி நெல்​லை​யில் ஆர்ப்​பாட்​டம் நடத்த உள்​ளோம்.

தமி​ழ​கம் உள்பட பல மாநிலங்​களில் சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​களை மேற்​கொள்ள இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. இதற்கு புதிய தமி​ழ​கம் கட்சி ஆதரவு அளிக்​கிறது. அதே​நேரத்​தில், இது வெளிப்​படை​யாக இருக்க வேண்​டும். நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் 2,538 பணி​யிடங்​களுக்கு தேர்​வில் மிகப்​பெரிய முறை​கேடு நடந்​துள்​ள​தாக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடிதம் எழு​தி​யுள்​ளது.

எனவே, இந்த பட்​டியலை ரத்து செய்ய வேண்​டும். இதற்​குப் பொறுப்​பேற்று துறை அமைச்​சர் கே.என்​.நேரு பதவி வில​கவேண்​டும். அதி​முக​வில் நடை​பெறும் நிகழ்​வு​கள் வேதனை அளிக்​கின்​றன. எங்​கள் கட்சி மாநாட்​டுக்கு பிறகு, புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் தேர்​தல் நிலைப்​பாடு தெளிவுப்​படுத்த முடி​யும். கூட்​ட​ணி​யில் பங்கு பெறு​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.



By admin