• Wed. May 14th, 2025

24×7 Live News

Apdin News

கண்ணைக் கவரும் ஒளிரும் காளான் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

Byadmin

May 14, 2025


கண்ணைக் கவரும் ஒளிரும் காளான்கள் ஏன், எப்படி உருவாகின்றன தெரியுமா? ஆனைமலைக் காடுகள், ஒளிரும் காளான்கள்,

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்

தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சியின் சில பகுதிகளில் ஒளிரும் காளான்களை மக்கள் பார்த்துள்ளனர்.

பகலில் வெள்ளை நிறத்தில் தோன்றும் அந்த காளான்கள், இரவில், ஈரப்பதமான சூழலில் நியான் பச்சை நிறத்தில் ஒளிரத்துவங்குகின்றன.

உயிரொளிர் (bioluminescence) உயிரினங்கள் அதிக அளவில் கடலில் இருப்பதாக பலர் நம்பினாலும் கூட, நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களும் நள்ளிரவில் ஒளிரக்கூடும் என்பதற்கு இத்தகைய காளான்களும் மின்மினிப்பூச்சிகளும் ஒரு நல்ல உதாரணமாக இருந்து வருகிறது.

வகைப்படுத்தப்பட்ட 1,20,000 பூஞ்சை வகைகளில், 100 பூஞ்சை வகைகள் ஒளிரும் தன்மை கொண்டவை என்று மோங்காபேயின் செய்தி குறிப்பிடுகிறது. அதில் வெகு சிலவே இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒளிரும் காளான்கள் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இங்கே, புகைப்படத் தொகுப்பில் உங்களுக்காக!

By admin