• Thu. Feb 27th, 2025

24×7 Live News

Apdin News

‘கோவில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயர் கூடாது’ – நீதிமன்ற உத்தரவுக்கு அறநிலையத்துறை பதில் என்ன?

Byadmin

Feb 27, 2025


'கோவில் திருவிழாக்களில் சாதிப் பெயர் கூடாது' - பட்டுக்கோட்டை வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன? அறநிலையத்துறையின் பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Images

‘கோவில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயர்களை குறிப்பிடக் கூடாது’ என்று கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் விழாவில், பட்டியல் சாதி மக்களை ‘ஊரார்’ என்ற பெயரில் அழைப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு அனைத்துக் கோவில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகக் கூறுகிறார், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது ஸ்ரீநாடியம்மன் கோவில். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமையானதாகக் கருதப்படும் இந்தக் கோவில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

By admin