• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

கோவை: உயிர்பயத்தில் சாலையோரம் தூங்கும் மக்கள் – இரவு நேர காப்பகங்கள் என்ன ஆயின?

Byadmin

Jul 20, 2025


சாலையோரம் தூங்குவோர் விபத்தில் இறப்பது தொடர்கிறது

பட மூலாதாரம், Getty Images

கோவையில் சமீபத்தில் சாலையோரத்தில் படுத்திருந்த 60 வயது பெண் ஒருவர், கார் ஏறி உயிரிழந்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன.

தமிழகத்தில் பல நகரங்களில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஆதரவற்றோர் இரவு நேர காப்பகங்கள் நடத்தப்பட்டாலும், இந்த காப்பகங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அவற்றில் வசிப்போருக்கு உணவளிக்க உள்ளாட்சி நிர்வாகங்களால் வழங்கப்பட்டு வந்த நிதி, கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காப்பக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 7 மாநகராட்சிகளில் சாலையோரங்களில் வசிப்பவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மேலும் 57 வீடற்றோர் காப்பகங்கள் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு தமிழக நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த சிவராசு பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

இரவு நடந்த விபத்து

இரவு நேர காப்பகங்கள்

கோவையில் திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வெளியே உள்ள நடைபாதையிலும், எதிரிலுள்ள பேருந்து முனையத்திலும் நுாற்றுக்கணக்கான ஆதரவற்றோர் இரவு நேரங்களில் தூங்குவது வழக்கம்.

By admin