• Tue. Dec 2nd, 2025

24×7 Live News

Apdin News

‘சஞ்சார் சாத்தி’ செயலி எவ்வாறு இயங்கும்? செல்போனில் அதை நிறுவ வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு ஏன்?

Byadmin

Dec 2, 2025


சஞ்சார் சாத்தி, மோதி, ராகுல் காந்தி, செல்போன், மத்திய அரசு, டிராய்

பட மூலாதாரம், @DOT

படக்குறிப்பு, சஞ்சார் சாத்தி வழிகாட்டுதல்கள் மூலம் சைபர் கிரைம்கள் தடுக்கப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை கூறியுள்ளது.

இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மார்ச் 2026 முதல் விற்கப்படும் புதிய செல்போன்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்தச் செயலியைச் செயலிழக்கச் செய்யவோ அல்லது அதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவோ முடியாதபடி இருப்பதை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது.

“செல்போன்களில் பயன்படுத்தப்படும் IMEI-இன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவே” சஞ்சார் சாத்தி செயலி பயன்படுத்தப்படும் என்று அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

முன்பே நிறுவப்பட்ட சாதனங்களில் உள்ள IMEI எண்ணை இந்தச் செயலி தானாகவே அணுகுமா அல்லது பயனர்கள் தாங்களே இந்த வன்பொருள் அடையாள எண்ணை (IMEI) உள்ளிட வேண்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மோதி அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறியுள்ள அந்த கட்சி, இந்த வழிகாட்டுதல்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

By admin