• Thu. Feb 27th, 2025

24×7 Live News

Apdin News

சிசேரியன் செய்த பெண்களுக்கு அடிக்கடி இடுப்புவலி வருமா?

Byadmin

Feb 27, 2025


அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து இடுப்பு வலி தோன்றும் என்றால், அதன் காரணமாக இடுப்பு எலும்பு மற்றும் குருத்தெலும்புகளில் தேய்மானம் ஏற்படலாம். கூடுதலாக, அதிக உடல் எடை, கடுமையான உடல் உழைப்பு, வயதுக்கு ஏற்றாத உடற்பயிற்சிகள் ஆகியவையும் இடுப்பு வலிக்கு காரணமாக இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பது இயல்பானது. ஆனால் இந்த எடை அதிகரிப்பால் உடலின் தோற்ற அமைப்பு மாறி, முதுகு பகுதி பின்புறம் வளைந்து, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமடைகின்றன. இதனால், இடுப்பு எலும்பு மற்றும் குருத்தெலும்பு அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இதனால், உடலின் பின்புற தசைகள் மற்றும் எலும்பு இணைப்புகள் அதிக பாரத்தை சந்திக்க நேரிடுகிறது. பல மாதங்கள் தொடர்ந்து அதிக பாரத்தை சுமக்கும் நிலையிலேயே, சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு இடுப்பு வலி தோன்றும். சிலருக்கு இது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும், ஆனால் சிலருக்கு இது வருடங்கள் நீடிக்கலாம்.

இடுப்பு தசை பிடிப்பு, தசை பிறழ்வு, ஜவ்வு இறுக்கம், குருத்தெலும்பு முறைகேடு, கீல்வாதம், எலும்பு வலு இழப்பு, முதுகெலும்பு வீக்கம், விபத்து, அதிக உடல் சதைப்பிடிப்பு, இடுப்பு தசைகள் நீளுதல் அல்லது கிழிதல் ஆகியவையும் இடுப்பு வலியை ஏற்படுத்தக்கூடிய காரணங்களாக இருக்கலாம்.

இருப்பினும், இடுப்பு வலியை கட்டுப்படுத்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். அதிக எடை தூக்குவதை தவிர்ப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடப்பது, முறையாக நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும், இடுப்பு வலி நீங்க, மருத்துவர் மற்றும் பிசியோதெரபி நிபுணர்களின் ஆலோசனை பெறுவது மற்றும் அவர்கள் பரிந்துரைக்கும் மருத்துவம் மற்றும் உடல் இயக்க பயிற்சிகளை செய்வது மிகவும் பயனளிக்கும்.

The post சிசேரியன் செய்த பெண்களுக்கு அடிக்கடி இடுப்புவலி வருமா? appeared first on Vanakkam London.

By admin