• Fri. Sep 27th, 2024

24×7 Live News

Apdin News

சுவிட்சர்லாந்து: தற்கொலை சாதனம் பயன்படுத்தி இறந்த பெண், பலர் கைது – என்ன நடந்தது?

Byadmin

Sep 26, 2024


தற்கொலை சாதனம் பயன்படுத்தி பெண் தற்கொலை : விசாரணை வளையத்தில் சுவிட்சர்லாந்து நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சார்கோ சாதனத்தின் சமீபத்திய மாடல் – ஜூலை மாதம் சூரிச்சில் காட்சிப்படுத்தப்பட்டது

(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.)

சுவிட்சர்லாந்தில் ஒரு பெண் `தற்கொலை பாட்’ என்ற சாதனத்தைப் பயன்படுத்தித் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை காவல்துறை கைது செய்துள்ளது.

திங்களன்று சார்கோ (Sarco) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தற்கொலை சாதனத்தைப் (suicide pod) பயன்படுத்தி ஒரு பெண் இறந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, ஷாஃப்ஹவுசென் (Schaffhausen) பகுதியில் உள்ள போலீசார், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் அதற்கு உதவி செய்தல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் “பல நபர்களை” கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

By admin