• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

சூர்யகாந்த்: இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி விசாரித்த முக்கிய வழக்குகளும் சர்ச்சைகளும் என்ன?

Byadmin

Nov 17, 2025


நீதிபதி சூர்யகாந்த், தலைமை நீதிபதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நீதிபதி சூர்யகாந்த் முந்தைய சில தலைமை நீதிபதிகளை விட நீண்ட பதவிக் காலத்தைக் கொண்டிருப்பார்

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்தை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக அறிவித்தார்.

2025 நவம்பர் 24-ஆம் தேதி நீதிபதி சூர்ய காந்த் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார். சமீபத்திய சில தலைமை நீதிபதிகளை விட அதிக காலம் அதாவது 15 மாதங்கள் அவர் (2027 பிப்ரவரி மாதம் வரை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

தலைமை நீதிபதி, இந்திய நீதித்துறை அமைப்பின் தலைமை அதிகாரி ஆவார். ஒரு நீதிபதியாக அவர் வழக்குகளை மட்டும் தீர்ப்பதில்லை, உச்ச நீதிமன்றம் தொடர்பான அனைத்து நிர்வாக விஷயங்களையும் முடிவு செய்கிறார்.

ஒரு வழக்கு எப்போது விசாரிக்கப்படும், எந்த நீதிபதி அதை விசாரிப்பார் என்பதை முடிவு செய்வது தலைமை நீதிபதியின் முக்கிய அதிகாரங்களில் ஒன்றாகும். எனவே, அனைத்து முடிவுகளிலும் தலைமை நீதிபதிக்கு “மறைமுக” அதிகாரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், பிகாரில் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’, நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் ‘இந்தியாஸ் காட் லேடன்ட்’ நிகழ்ச்சியைச் சுற்றியுள்ள சர்ச்சை மற்றும் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது என பல உயர்மட்ட வழக்குகளில் நீதிபதி சூர்யகாந்த் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

By admin