• Sun. Nov 2nd, 2025

24×7 Live News

Apdin News

செங்கோட்டையன் நீக்கம் பற்றி எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கூறியது என்ன?

Byadmin

Nov 1, 2025


கே.ஏ. செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையன் அக்டோபர் 31ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஒரு நோட்டீஸ்கூட அனுப்பாமல் தன்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகக் கூறிய கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் கட்சி விதிகள் இதில் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “செங்கோட்டையனை நீக்கியதற்காக தொகுதியில் உள்ள தொண்டர்களே இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

அ.தி.மு.கவை முடக்கவோ பலவீனப்படுத்தவோ முற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” என கூறினார்.

அக்டோபர் 30 அன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.



By admin