• Sat. Jul 19th, 2025

24×7 Live News

Apdin News

செஞ்சி கோட்டையை கட்டியது யார்? சிவாஜியின் ராணுவ தளங்களில் ஒன்றாக குறிப்பிட்டு யுனேஸ்கோ அங்கீகரித்ததால் சர்ச்சை

Byadmin

Jul 19, 2025


செஞ்சிக் கோட்டையின் பின்னணி

பட மூலாதாரம், Facebook/TN Tourism

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அங்கீகாரம் சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புகழ்பெற்ற மராத்திய மன்னரான சிவாஜியுடன் தொடர்புபடுத்தப்பட்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த சலசலப்பிற்குக் காரணம். உண்மையில் செஞ்சிக் கோட்டையைக் கட்டியது யார்?

யுனெஸ்கோவுக்கு இந்தியா பரிந்துரை

இந்திய அரசின் கலாசார அமைச்சகம் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலுக்கான 2024 – 25ஆம் ஆண்டு பரிந்துரையாக ‘Maratha Military Landscapes’ என்ற பெயரில் 12 கோட்டைகளின் பெயர்களை அனுப்பியது. அதில் சல்ஹர் கோட்டை, ஷிவ்நேரி கோட்டை, லோகட், காந்தேரி கோட்டை, ராய்கட், ராஜ் கட், பிரதாப்கட், ஸ்வர்ணதுர்க், பன்ஹலா கோட்டை, விஜய் துர்க், சிந்து துர்க், செஞ்சிக் கோட்டை ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் செஞ்சிக் கோட்டையைத் தவிர்த்த பிற வரலாற்றுச் சின்னங்கள் எல்லாம் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவை.

ராமதாஸ் கண்டனம்

இப்போது யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மராத்தா ராணுவ சின்னமாக கருதப்பட்டு இதற்கு அங்கீகாரம் வழங்கியருப்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டித்திருக்கிறார்.

By admin