• Fri. Sep 27th, 2024

24×7 Live News

Apdin News

செந்தில் பாலாஜி: பிணையில் வந்திருப்பது திமுகவுக்கு கோவை மண்டலத்தில் வலு சேர்க்குமா?

Byadmin

Sep 26, 2024


செந்தில் பாலாஜியின் மீள் வருகை திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் வலு சேர்க்குமா?

பட மூலாதாரம், Senthil Balaji/X

படக்குறிப்பு, செந்தில் பாலாஜி 471 நாட்களை சிறையில் கழித்த நிலையில் பிணை கிடைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்களைச் சிறையில் கழித்த நிலையில், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பிணை கிடைத்துள்ளது.

அவர் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட முயற்சிகள் எப்படியிருக்கும், வழக்கின் நகர்வுகள் எந்தத் திசையில் இருக்கும் என்பது பற்றிய விவாதங்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.

அது ஒருபுறமிருக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் வெளியில் வந்திருப்பது, திமுகவினரிடையே குறிப்பாக கோவை மண்டல திமுகவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை வெளிப்படுத்தும் விதமாக, கோவை, கரூர் உள்ளிட்ட மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அக்கட்சியினர், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

By admin