ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கு நபர்களுக்கு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள், இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றாகும்.
இந்த ஆண்டு, குடியரசுத் தலைவர் ஐந்து பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்ம ஸ்ரீ விருதுகள் உட்பட 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளின் இரண்டாம் கட்ட விழா, ஜூன் 23 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.
அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டின் மதிப்புமிக்க குடிமை விருதுகளை 65 புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு வழங்கவுள்ளார்.