• Tue. Dec 2nd, 2025

24×7 Live News

Apdin News

டெனிசோவன்: பூமியில் வாழ்ந்து அழிந்த மனித இனத்தின் மரபணுவில் புதைந்துள்ள ரகசியம்

Byadmin

Dec 2, 2025


ஹோமோ சேபியன்ஸ், நியண்டர்தால், டெனிசோவன், ஆதி மனிதர்கள், பனிக்காலம்

பட மூலாதாரம், Mike Kemp/In Pictures via Getty Images

படக்குறிப்பு, டெனிசோவன்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் புதைபடிமங்கள் 21ஆம் நூற்றாண்டு வரை கண்டுபிடிக்கப்படாததுதான் அவர்கள் மர்மமாகவே இருந்ததற்குக் காரணம்

மனித குடும்பத்தில் வாழ்ந்த ஒரு மூதாதையர் இனம் பற்றிய புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மனித இனம் இருப்பதற்கு அவர்கள் மிக முக்கியப் பங்கு வகித்ததும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. யார் இவர்கள்? கண்டங்கள் கடந்து சென்று அவர்கள் சாதித்தது என்ன?

இன்று பூமியில் நடமாடும் ஒரே மனித இனமாக ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) மட்டுமே உள்ளனர். ஆனால், எப்போதும் இப்படி இருந்ததில்லை.

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனித குடும்பத்தில் குறைந்தபட்சம் மேலும் இரண்டு குழுக்கள் இருந்தன: அவை நியண்டர்தால்கள் (Neanderthals) மற்றும் டெனிசோவன்கள் (Denisovans).

இதில், நியண்டர்தால்கள் பற்றிப் பல தகவல்கள் உள்ளன. 1856ஆம் ஆண்டில் ஜெர்மனியின் நியண்டர் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கல் சுரங்கத்தில் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக எலும்புகளைக் கண்டுபிடித்தனர்.

அவை ஆரம்பத்தில் ஒரு கரடியின் எச்சங்களாகக் கருதப்பட்டன. ஆனால் அவை நியண்டர்தால்கள் எனத் தெரிந்த பின் யுரேசியாவின் மேற்குப் பகுதியில் அவர்களின் ஏராளமான தொல்லியல் மற்றும் பழங்காலச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

By admin