• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

டெல்லி கார் வெடிப்பு குறித்து உலக நாடுகள் கூறுவது என்ன?

Byadmin

Nov 13, 2025


டெல்லி கார் வெடிப்புச் சம்பவம், உலக நாடுகள் அறிக்கை, டெல்லி

பட மூலாதாரம், Sean Gallup/Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (கோப்புப்படம்)

டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் தற்போது வரை குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி இஸ்ரேல், சீனா, இரான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இஸ்ரேலின் இரங்கல்களைத் தெரிவிப்பதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது அருமை நண்பர் மோதிக்கும், இந்தியாவின் தைரியமான குடிமக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், நானும் ஒட்டுமொத்த இஸ்ரேலும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துக்கமான தருணத்தில் இஸ்ரேல் உங்களுடன் துணை நிற்கிறது. இந்தியாவும் இஸ்ரேலும் உண்மை மீது கட்டமைக்கப்பட்ட பழமையாக நாகரீகங்களாகும். தீவிரவாதம் நம்முடைய நகரங்களைத் தொடலாம், ஆனால் நம்முடைய ஆன்மாவை எப்போதும் அசைக்க முடியாது. நமது தேசங்களின் ஒளி நமது எதிரிகளின் இருளை குத்திச் செல்லும்.” எனத் தெரிவித்திருந்தார்.

By admin