புதுவையில் 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை எதிர்த்து இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம், தவெக கூட்டணியில் நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் ஆகியோர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான என்ஆர்.காங்கிரஸ் மீண்டும் போட்டியிட உள்ளது.
அதேநேரத்தில் தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெகவுக்கு இடம்பெயர்ந்துள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் அல்லது தவெக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் திமுகவும் இத்தொகுதியில் களம் இறங்க உள்ளது.