• Thu. Feb 27th, 2025

24×7 Live News

Apdin News

தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் – புகார்களை மறுத்து அறிக்கை

Byadmin

Feb 27, 2025


ஷியாம் சுந்தர் பார்டியா

பட மூலாதாரம், Youtube/WorldEconomicForum

படக்குறிப்பு, ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஷியாம் சுந்தர் பார்டியா உள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடிகை ஒருவர் பார்டியாவுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார். ஆனால், காவல்துறையினர் அந்த புகாரை வழக்காக பதிவு செய்யவில்லை. பார்டியா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த நடிகை மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த விவகாரம் நீதிபதி நீலா கோகலே முன்பு விசாரணைக்கு வந்தது. புகார் அளித்த பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து, பின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் (Ld. APP) வழங்கிய அறிவுறுத்தலைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தார் நீலா. தற்போது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நடிகை அளித்த குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் விசாரிக்கப்படவில்லை.

By admin