• Mon. Nov 3rd, 2025

24×7 Live News

Apdin News

நடிகர் அஜித் கரூர் கூட்ட நெரிசல், இலவசங்கள் பற்றி பேசியது என்ன?

Byadmin

Nov 2, 2025


அஜித் குமார் - கரூர் கூட்ட நெரிசல் - விஜய்

பட மூலாதாரம், Getty Images

“கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அந்த ஒரு மனிதருடைய தவறு மட்டுமல்ல. நம் அனைவருக்குமே இதில் பங்கிருக்கிறது. செல்வாக்கைக் காட்ட கூட்டம் கூட்டுவதை நாம் நிறுத்த வேண்டும். ஒரு சமூகமாக நாம் மாறவேண்டும்” என்று கூறியிருக்கிறார் நடிகர் அஜித் குமார்.

தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்றுவரும் அஜித், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’வுக்கு சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மேலும், இந்தப் பேட்டியில் தனக்கு ரேஸிங் பிடித்ததற்கான காரணம், விளையாட்டு தனக்குள் ஏற்படுத்திய தாக்கம், பிரபலமாக இருப்பதனால் ஏற்படும் பிரச்னைகள், அடுத்த படத்தின் அப்டேட் என பல விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார் அஜித்.

கரூர் கூட்ட நெரிசல் – “அந்த ஒரு மனிதருடைய தவறு மட்டுமல்ல”

கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.



By admin