• Mon. Jul 21st, 2025

24×7 Live News

Apdin News

பண்டைய கால பெண்கள் பாலுறவு பற்றி என்ன நினைத்தார்கள்?

Byadmin

Jul 20, 2025


பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

பண்டைய உலகின் வரலாறை பெண்கள் மூலம் ஒரு புத்தகம் சொல்கிறது. எழுத்தாளர் டெய்சி டன்னின் புத்தகம், பெண்கள் தங்கள் தனிப்பட்ட காம ஆசைகள் பற்றி என்ன சொன்னார்கள் என்பதை ஆராய்கிறது. பெண் வெறுப்பை கொண்ட ஆண்களின் எண்ணத்துக்கு எதிராக அவர்களின் கருத்துக்கள் இருந்தன.

கி.மு 7ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த ஆண் கவிஞர் அமோர்கோஸின் செமோனைட்ஸ் கூற்றுப்படி, பெண்களை பத்து முக்கிய வகையாக பிரிக்கலாம். சுத்தம் செய்வதை விட சாப்பிட விரும்பும் ‘பன்றிகளைப் போன்ற பெண்கள்’; விசித்திரமாக கவனிக்கும் ‘நரிகளைப் போன்ற பெண்கள்’; பாலியல் ரீதியாக அதிக இச்சைக் கொண்ட ‘கழுதைப் பெண்கள்’; கீழ்ப்படியாத ‘நாய்-பெண்கள்’.

அதேபோல, புயல் வீசும் கடல் பெண்கள், பேராசை கொண்ட பூமிப் பெண்கள், வேட்டைக்கார திருட்டுப் பெண்கள், சோம்பேறியான குதிரைப் பெண்கள், அழகற்ற குரங்குப் பெண்கள் மற்றும் நல்ல வகையைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் கடின உழைப்பாளி தேனீப் பெண்கள் என பெண்களை ஆண் கவிஞர் வகைப்படுத்தினார்.

அந்தக் காலத்தில் நிலவிய பெண் வெறுப்பை அப்பட்டமாக காட்டும் இந்தப் பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்துப் பெண்களிலும், பாலியல் ரீதியாக ஒழுக்கக்கேடானவர்கள் என முத்திரை குத்தப்பட்ட “கழுதைப் பெண்கள்” மிகவும் மர்மமானவர்களாக இருக்கலாம்.

By admin