• Wed. Dec 3rd, 2025

24×7 Live News

Apdin News

பழைய செல்போன் வாங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? தவிர்க்க 5 எளிய வழிகள்

Byadmin

Dec 3, 2025


பழைய செல்போன்களை வாங்கினால் என்ன பிரச்னை? இந்திய அரசு எச்சரிப்பது ஏன்? கேள்விகளும் பதில்களும்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

“செல்போனில் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை சேதப்படுத்தினால் தொலைத்தொடர்பு சட்டத்தின்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்” என இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DOT) எச்சரித்துள்ளது.

பொது மக்கள், தங்கள் செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண் சரியாக உள்ளதா என்பதை பிரத்யேக செயலி மூலம் சரிபார்க்குமாறும் தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

“பழைய செல்போன்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனத்துடன் செயல்படாவிட்டால் சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்” என்று சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் கடந்த நவம்பர் 24ஆம் தேதியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணை சேதப்படுத்துதல் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது.

1. ஐ.எம்.இ.ஐ எண்களின் தவறான பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி?

இந்தியாவில் செல்போன் பயன்பாட்டின் வளர்ச்சியில் ஐ.எம்.இ.ஐ எண்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக, தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

By admin