தாக்குதலுக்குப் பிறகு, சோதனைச் சாவடியில் இருந்த 8 வீரர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட வீரர்கள் அனைவரும் தற்போது ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் ஒரு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தங்களால் கடத்தப்பட்ட 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்ட வீரர்களை மீட்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது.