• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

பெங்களூருவில் ஐரோப்பிய வேலை மோசடியில் லட்சக்கணக்கில் ஏமாந்தவர்கள் கூறுவது என்ன?

Byadmin

Nov 12, 2025


பெங்களூரு, வேலைவாய்ப்பு மோசடி, விசா மோசடி, ஐரோப்பிய நாடுகளில் வேலை

பட மூலாதாரம், AFP via Getty Images

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்யும் முகவர்கள் மிகவும் கவனமாகத் தங்கள் வலையைப் விரிக்கிறார்கள்.

இத்தகைய முகவர்கள் செயல்படும் விதம் குறித்து பெங்களூரைச் சேர்ந்த மெஹபூப் பாஷா பிபிசி ஹிந்தியிடம் விளக்கினார்.

பெங்களூருவில் உள்ள உரிமம் இல்லாத ஆள் சேர்ப்பு நிறுவனங்கள் மெஹபூப் பாஷா உட்பட ஏழு பேரிடம் கடந்த ஒரு வருடத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலை அனுமதி (Work Permit) பெற்றுத் தருவதாக ஆள் சேர்ப்பு முகவர் உறுதியளித்தார் என்றும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு புதிய நாட்டைப் பரிந்துரைப்பார் என்றும் மெஹபூப் கூறுகிறார்.

“நான் காலையில் அவருக்குப் போன் செய்தால், நீங்கள் செர்பியாவுக்குப் போய் விடுங்கள் என்று சொல்வார். மாலையில், நான் உங்களுக்கு பெலாரஸின் வேலை அனுமதி பெற்றுத் தருகிறேன் என்பார், பின்னர் ஸ்லோவாக்கியாவின் பெயரைக் கூறுவார். மறுநாள், ஸ்பெயினுக்குச் செல்லுங்கள், அங்கு உங்கள் குடும்பத்தையும் அழைத்துச் செல்லலாம் என்பார்.”

By admin