• Tue. Dec 2nd, 2025

24×7 Live News

Apdin News

லார்ட் டல்ஹவுசி: பல சமஸ்தானங்களை கைப்பற்றிய இந்தியாவின் இளம் கவர்னர் ஜெனரல் நகர்வு 1857 கிளர்ச்சிக்கு வழி வகுத்ததா?

Byadmin

Dec 2, 2025


லார்ட் டல்ஹவுசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1848 முதல் 1856 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் டல்ஹவுசி

பிரிட்டிஷ் பார்வையில்,1848ஆம் ஆண்டு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற லார்ட் டல்ஹவுசி, மூன்று முக்கிய பணிகளை நிறைவேற்றினார் என்று கூறப்படுகிறது. முதலாவதாக, அவர் பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைகளை பெரிதும் விரிவுபடுத்தினார்.

டல்ஹவுசி, தனது ‘டாக்ட்ரின் ஆஃப் லேப்ஸ்’ கொள்கையின் கீழ் வலுக்கட்டாயமாக பல சமஸ்தானங்களை பிரிட்டிஷ் ஆட்சிக்குள் இணைத்ததன் மூலம் ஒரு பெரிய பேரரசின் அடித்தளத்தை அமைத்தார்.

ஆனால் டல்ஹவுசியின் மிகப்பெரிய சாதனை இந்தியா முழுவதும் ரயில்வே, சாலைகள், தகவல் தொடர்பு சேனல்கள் மற்றும் கால்வாய்களின் வலையமைப்பை அமைத்ததுதான்.

“இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மாறுவதற்கு முன்பு, டல்ஹவுசிக்கு மூன்று பொறுப்புகள் வழங்கப்பட்டன. எல்லைகளை விரிவுபடுத்துதல், இந்தியாவை ஒன்றிணைத்தல் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளங்களை சுரண்டுதல்” என்று டல்ஹவுசியின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் வில்லியம் வில்சன் ஹண்டர் குறிப்பிட்டுள்ளார்.

“டல்ஹவுசி இந்தப் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றினார், ஆனால் இந்திய மக்களின் பார்வையில், டல்ஹவுசியின் இந்தக் கொள்கைகள் அவரை இங்குள்ள மக்களிடமிருந்து அந்நியப்படுத்தின.”

By admin