7
உயர்ந்த மரநிழலில்
ஒரு தகரக் கொட்டகை
பல வகை அதிஸ்டலாபச் சீட்டுகள்
அடுக்கி வைத்த பலகை
ஒரு மனிதனின் வாழ்வாதாரம்
நகரத்தின் மையத்தில்
சைக்கிள் உருட்டி வந்த
கிழவரும் வாங்கினார்
அழகு நடை நடந்து வந்த
யுவதியும் வாங்கினாள்
பாடசாலை செல்லும்
சிறுவரும் வாங்கினர்
பளபளக்கும் காரில் வந்த
கோதையரும் வாங்கினர்
மோட்டார் சைக்கிள் ஓட்டி
ஸ்ரையிலாய் இறங்கி வந்த
இளைஞனும் வாங்கினான்
வாங்கியவருள் வயது பால் வேறுபாடில்லை
கண்மூடிக் கும்பிட்டு ஒன்றை
எடுத்த பக்தரும் உண்டு
எண் கூட்டிப் பார்த்து
வாங்கியவரும் உண்டு
செல்வந்தர் ஆகி விட
யாருக்குத் தான் விருப்பமில்லை
உன்னில் நம்பிக்கை வை
ஓயாமல் உழைத்தாயானால்
வெற்றி உன்னை வந்து சேரும்
என்று எவரும் நம்பவில்லை
அதிஸ்டத்தை நம்பி
லோட்டறிச் சீட்டு வாங்குகின்றார்
– திரு பத்மநாபன் மகாலிங்கம்