• Wed. Dec 10th, 2025

24×7 Live News

Apdin News

விஜய்யின் புதுச்சேரி பேச்சு உணர்த்துவது என்ன? அரசியல் களம் மாறுகிறதா?

Byadmin

Dec 10, 2025


விஜய்யின் புதுச்சேரி பேச்சு: என்ன திட்டமிடுகிறார்?

பட மூலாதாரம், X

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரி அரசை பெரிதாக விமர்சனம் செய்யாமல், பொதுவான பிரச்னைகளைப் பேசிச் சென்றிருக்கிறார். புதுச்சேரியில் விஜய்யின் திட்டம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று (டிச. 09) நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டங்களில் விஜய்யும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் திமுகவைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

ஆனால், இந்தக் கூட்டம் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் என்பதால் இங்கே விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

சுமார் 11 மணியளவில் கூட்டம் துவங்கியதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச ஆரம்பித்தார்.

புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “தமிழ்நாட்டில் எங்கேயும் நம்மை விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 2026ல் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நம்முடைய கட்சி ஆட்சியைப் பிடிக்கும்” என்று குறிப்பிட்டார்.

By admin