• Sun. Nov 2nd, 2025

24×7 Live News

Apdin News

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம் | PMK resolution to protest for reservation

Byadmin

Nov 2, 2025


சென்னை: ​சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்​து​வது என பாமக​வின் ஒருங்​கிணைந்த செயற்​குழு கூட்​டங்​களில் தீர்​மானிக்கப்​பட்​டது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இதனால் கட்​சி​யில் நிர்​வாகி​களும், தொண்​டர்​களும் இரு பிரிவு​களாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்​புமணிக்கு எதி​ராக, தனது மகள் காந்​தியை கட்​சி​யின் செயல் தலை​வ​ராக ராம​தாஸ் அறி​வித்​தார். இளைஞர் சங்க தலை​வ​ராக கட்​சி​யின் கவுரவ தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நியமித்​தார்.

இதனை தொடர்ந்​து, பாமக​வின் ஒருங்​கிணைந்த மாவட்ட செயற்​குழுக் கூட்​டம் தமிழகம் முழு​வதும் 36 இடங்​களில் நேற்று நடைபெற்றது. சென்​னை​யில் ஜி.கே.மணி தலைமையிலும், கடலூரில் செயல் தலை​வர் காந்தி பரசு​ராமன், அரியலூரில் வன்​னியர் சங்க மாநில தலை​வர் பு.​தா.அருள்​மொழி, தஞ்​சாவூரில் இணை பொதுச்​செய​லா​ளர் அருள் எம்​எல்ஏ உள்ளிட்டோர்் தலை​மை​யில் கூட்​டம் நடைபெற்​றது.

இதில் கட்​சி​யின் உறுப்​பினர் சேர்க்​கையை தீவிரப்​படுத்த வேண்​டும்.சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு கோரி வரும் டிச.5-ம்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்அறவழி போராட்​டம் நடத்து​வதுஎன்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



By admin