• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

“அக்காவிடம் 1000 ரூபாயைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக்கில் அண்ணனிடம் அதை பறித்து விடுகிறார்கள்!” – தடதடக்கும் தமிழிசை நேர்காணல் | exclusive interview with Tamilisai Soundararajan

Byadmin

Mar 30, 2025


பழனிசாமி – அமித் ஷா சந்திப்பு, 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் பதிவு, பிரதமர் மோடி மீது தவெக தலைவர் விஜய் விமர்சனம் என பாஜக-வை சுற்றி தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாகி வரும் நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

ஆளுநர்கள் அரசியல்வாதிகள் போல் செயல்படுவதால் தான் மாநில அரசுடன் மோதல் ஏற்படுகிறதா? – அரசி​யல் ரீதி​யாக செயல்​படு​வது என்​ப​தைத் தாண்​டி, மக்​கள் பிரச்​சினை​கள் குறித்து சிந்​தித்​து, அவர்​களுக்​காக ஆளுநர்​கள் செயல்​படு​வது ஆட்​சி​யாளர்​களுக்கு பிடிப்​ப​தில்​லை. நாங்​கள் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வர்​கள், எங்​களுக்​குத்​தான் உரிமை என்ற வசனத்தை அடிக்​கடி அவர்​கள் சொல்​வார்​கள்.

அதேசம​யம், மக்​களைப் பற்றி கவலைப்​ப​டா​மல் அவர்​களது நடவடிக்​கை​கள் இருந்​தால், அதை ஆளுநர்​கள் கையைக் கட்​டிக்​கொண்டு வேடிக்கை பார்க்க வேண்​டும் என நினைக்​கின்​ற​னர். நான் ஆளுந​ராக பதவி வகித்த ஒவ்​வொரு நாளும், மக்​கள் நலன் சார்ந்தே செயல்​பட்​டேன் என்று சொல்​வ​தில் பெரு​மைப்​படு​கிறேன். மற்ற மாநிலங்​களில் உள்ள கருத்து வேறு​பாடு​களை பற்றி நான் கருத்​துச் சொல்ல முடி​யாது.

இரு மொழிக் கொள்கையில் படித்த தங்களைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கும் போது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தியே ஆக வேண்டுமென மத்திய அரசு நிர்பந்திப்பது சரியா? – இரு​மொழிக் கொள்​கை​யில் தான் நாங்​கள் படித்​தோம். அன்​றைய சூழல் வேறு. இன்​றைய சூழல் வேறு. இன்​றைய அறி​வியல், விஞ்​ஞான வளர்ச்​சிக்கு ஒரு இணைப்பு மொழி தேவை​யாய் உள்​ளது. இதை உணரா​மல் திமுக இந்தி திணிப்பு என்ற பொய் பிரச்​சா​ரத்தை முன்​னெடுக்​கிறது.

மும்​மொழிக் கொள்​கையை வலி​யுறுத்தி நாங்​கள் நடத்​திய கையெழுத்து இயக்​கத்​தில் 30 லட்​சம் பேர் இது​வரை கையெழுத்​திட்​டுள்​ளனர். மக்​கள் ஆதரிக்​கிற, மக்​கள் நலனுக்​கான திட்​டங்​களை தடுக்க திமுக-வுக்கு உரிமை இல்​லை. இவர்​கள் நடத்​தும் தனி​யார் பள்​ளி​களில் மும்​மொழியை பிர​தானப் படுத்​தி​விட்​டு, அரசி​யலுக்​காக அரசுப் பள்ளி மாண​வர்​களுக்கு மட்​டும் அநீதி இழைப்​பதை ஏற்க முடி​யாது.

மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை கொடுக்க மறுத்து, கொத்தடிமை போல் நடத்துவதாக முதல்வர் ஆவேசப்பட்டிருக்கிறாரே? – இது உண்மை அல்ல. மாநில அரசு​தான் மத்​திய அரசை ஒரு எதிரி அரசை போல சித்​தரிக்​கிறது. எதற்​கெடுத்​தா​லும் இணக்​கமற்ற சூழ்​நிலையை ஏற்​படுத்​துகின்​ற​னர். தமிழக அரசு ஒன்​பது லட்​சம் கோடி கடனை வாங்கி வைத்​து​விட்​டு, மத்​திய அரசு பத்​தா​யிரம் கோடி கொடுத்​தால் கூட வேண்​டாம் என்று முதல்​வர் வீர வசனம் பேசுவது எப்​படி சரி​யாக இருக்கும்? அரசி​யலுக்​காக இவர்​கள் மோதல் போக்கை கடை​பிடிப்​ப​தால், தமிழக மக்​களுக்கு கிடைக்க வேண்​டிய திட்​டங்​கள் கிடைக்​காமல் போகிறது. தெலங்​கா​னா​வில் இதே​போல் மத்​திய அரசுக்கு எதி​ரான போக்​கைக் கொண்​டிருந்த சந்​திரசேகர் ராவ் அரசை அந்த மக்​கள் வீட்​டுக்கு அனுப்​பினர். அதே நிலை இங்​கும் ஏற்​படும்​.

என்டிஏ கூட்டணிக்கு எதிராக இண்டியா கூட்டணியை கட்டமைத்ததில் தொடங்கி, தொகுதி வரையறை விஷயத்தில் மாநில முதல்வர்களை திரட்டி ஆலோசனைக் கூட்டம் போட்டது வரை பாஜக-வுக்கு பெரும் சவாலாக இருக்கிறதே திமுக? – தமி​ழ​கத்​தில் ஜாக்​டோஜியோ அமைப்​பில் தொடங்கி பல்​வேறு தரப்​பினரும் அரசுக்கு எதி​ராக போராட்​டத்​தில் குதித்து விட்​டனர். நாள்​தோறும் கொலை, கொள்ளை பட்​டியல் கூடிக் கொண்டே போகிறது. சட்​டம் – ஒழுங்கு சந்தி சிரிக்​கிறது. பொங்​கல் பரிசு கூட கொடுக்க முடி​யாமல் கடனில் தவிக்​கும் சூழ்​நிலை. இது போன்ற பல நெருக்​கடிகளை மறைக்க பாஜக-வுக்கு நெருக்​கடி கொடுப்​பதை போன்ற ஒரு தோற்​றத்தை ஏற்​படுத்​துகி​றார்​கள்​.

மகளிர் உரிமைத்தொகை, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித் தொகை என தமிழக அரசின் திட்டங்களை பிறமாநில அரசுகளும் பின்பற்றுவது திராவிட மாடல் அரசின் வெற்றி இல்லையா? – மகளிர் உரிமைத் தொகை திட்​டம் ஏற்​கெனவே மத்​தி​ய பிரதேசத்​தில் செயல்​படுத்​தப்​பட்ட திட்​டம் தான். திமுக அரசு அமைந்த 2 ஆண்டு கழித்​து​தான் மகளிர் உரிமைத் தொகை திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டது. ஆனால், டெல்​லி​யில் பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்​றது​மே, பெண்​களுக்கு ரூ.2500 உரிமைத்​தொகை வழங்​கும் திட்​டப் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளது. மற்ற மாநிலங்​களில் இதை விட பல சிறப்​பான திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படு​கின்​றன. மகா​ராஷ்டி​ரா​வில், லட்​சா​திபதி திட்​டத்​தின் கீழ், 75 லட்​சம் பெண்​களை லட்​சா​திபதி ஆக்​கி​யிருக்​கி​றார்​கள்.

மத்​திய அரசின் முத்ரா திட்​டத்​தில் 30 சதவீதம் பெண்​களுக்கு கடன் கொடுத்து தொழில் முனை​வோர் ஆக்​கப்​படு​கின்​ற​னர். தமி​ழ​கத்​தில் மகளிருக்​கான திட்​டங்​களை செயல்​படுத்​து​வது மகிழ்ச்​சி. ஆனால், அதை ‘ஓசி பஸ் பயணம்’ என்று அமைச்​சர்​களே கிண்​டல் செய்​வது வேதனை​யாக உள்​ளது. இவர்​கள் வாக்​குக்​காக இதனை செய்​கி​றார்​களே தவிர, முழு அக்​கறை​யுடன் செய்​ய​வில்லை ஆயிரம் ரூபாயை அக்​கா​விடம் கொடுத்​து​விட்​டு, டாஸ்​மாக்​கில் டார்​கெட் வைத்து அண்​ணனிடம் அதனை பறித்து விடு​கி​றார்​கள்​.

நடிகர் விஜய், திமுக-வுடன் சேர்த்து பாஜக-வையும் எதிரி பட்டியலில் வைத்து விட்டது பற்றி..? – ​விஜய் போன்று புதி​தாக அரசி​யல் களத்​துக்கு வருபவர்​கள், புதி​தாக விஷ​யங்​களைச் சொல்​லி, புதிய பாதை​யில் பயணிக்க வேண்​டும், ஆனால், விஜய் திமுக சொல்​வதை கிளிப்​பிள்​ளை​யைப் போல் சொல்​கி​றார். விஜய் படங்​கள் தமி​ழில் மட்​டுமின்றி தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளத்​தி​லும் வெளி​யாகிறது. ஆக, தொழில் ரீதி​யாகவே மும்​மொழி தேவைப்​படும்​போது, திமுக சொல்​வது போல் மும்​மொழி வேண்​டிய​தில்லை என்று விஜய் பேசுகி​றார். சினி​மா​வில் சண்​டை, நடனம், காமெடி போன்ற காட்​சிகள் வைத்​துக் கொள்​வது போல், ஒரு புரிதல் இல்​லாமல் விஜய் கொள்​கை​களை பேசி வரு​கி​றார்​.

2026 தேர்தலில் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் இடையில்தான் போட்டி என்கிறாரே விஜய்? – ​விஜய்க்கு நிரூபிக்​கப்​பட்ட வாக்கு வங்கி எது​வும் கிடை​யாது. மற்ற கட்​சிகளுக்கு நிரூபிக்​கப்​பட்ட வாக்கு வங்கி இருக்​கிறது. இன்​றைக்​கும், விஜய் கால்​ஷீட் கொடுத்து தான் அரசி​யல் களத்​தில் இருக்​கி​றார். அவர் இன்​னும் அரசி​யலில் கால் பதிக்​க​வில்​லை. தொண்​டர்​களை உற்​சாகப்​படுத்த வேண்​டு​மா​னால் இது போன்ற பேச்சு உதவி​யாக இருக்​கலாம். தமிழக அரசி​யல் அந்த நிலை​யில் இல்​லை. இங்கு பலமான பல தலை​வர்​கள் இருக்​கி​றார்​கள்​.

வாக்குக்காக காங்கிரஸுடனும் கொள்ளையடிப்பதற்காக பாஜக-வுடனும் திமுக கூட்டணி வைத்திருப்பதாக விஜய் சொல்கிறாரே? – ​தி​முக-வை முழு வீச்​சில் எதிர்க்​கும் பாஜக-​வின் முயற்​சிகளை திசை திருப்ப இந்த குற்​றச்​சாட்டு உதவும். திமுக கொள்​கை​களை எதிர்க்​கும் நாங்​கள் பி டீம் என்​றால், திமுக-​வின் கொள்​கை​களை அப்​படியே ஒப்​புவிக்​கும் தவெக, திமுக-​வின் பி டீம் என்று நாங்​கள் சொல்ல எவ்​வளவு நேர​மாகும்?

தமி​ழ​கத்​தில் ஆட்​சி​யில் உள்ள திமுக-வை இறக்​கு​வதற்​குத் தான் தேர்​தல் நடக்​கிறது. அவர்​களை ஆட்​சி​யில் இருந்து இறக்க வேண்​டும் என்று விஜய் நினைக்​கி​றாரா அல்​லது பாஜக-வை விமர்​சிப்​ப​தன் மூலம், அவர்​கள் (தி​முக) மீது இரக்​கப்​படு​கி​றாரா என்று தெரிய​வில்​லை.

‘2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு’ என்ற அமித் ஷாவின் பதிவு தமிழக மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? – தமி​ழ​கத்​தில் மக்​கள் விரோத திமுக ஆட்​சியை வீழ்த்த வேண்​டும் என்​பது​தான் எங்​களது ஒரே குறிக்​கோள். அதற்​காக நாங்​கள் பல கட்​சிகளோடு பேச்​சு​வார்த்தை நடத்​திக் கொண்​டிருக்​கி​றோம். அதன் மூலம் ஒரு கூட்​டணி அரசைக் கொண்டு வரு​வோம் என்று அமித் ஷா சொல்லி இருக்​கி​றார்​.

என்டிஏ கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம்பெறுமா? – கூட்​டணி விஷ​யத்​தில் எங்​களது மத்​திய தலைமை என்ன வழி​காட்​டு​கிறதோ அதன்​படி நாங்​கள் நடப்​போம். எங்​களது கருத்தை மத்​திய தலைமை கேட்​கும் போது தெரி​விப்​போம். அவர்​கள் எடுக்​கும் முடிவுக்கு கட்​டுப்​பட்டு செயல்​படு​வோம்​.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பிஉதயகுமார் அமித் ஷாவை ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று பாராட்டி இருக்கிறாரே..? – அவர் உண்​மை​யைச் சொல்லி இருக்​கி​றார். உண்​மை​யைச் சொன்​னால் உடனே கூட்​டணி என்று நினைக்க வேண்​டிய​தில்​லை. எதிர்த்​துச் சொன்​னால் கூட்​டணி இல்லை என்​றும் நினைக்க வேண்​டிய​தில்​லை. உள்​துறை அமைச்​சரை அவர் பாராட்​டியதை நான் பாராட்​டு​கிறேன்​.

“சீமான் எங்கள் டீம் பார்ட்னர் இல்லை. அவர் எங்கள் தீம் (கருத்தியல்) பார்ட்னர்” என்று சொன்னீர்களே… அந்த இணக்கம் தேர்தல் வரை தொடருமா? – பெரி​யார் குறித்து பாஜக-​வின் நிலைப்​பாட்டை ஒட்டி அவர் கருத்து தெரி​வித்​த​போது இந்​தக் கருத்தை சொன்​னேன். அதற்​காக சீமானின் எல்லா கருத்​துகளுக்​கும் நாங்​கள் ஒத்​துப்​போக வேண்​டியது இல்​லை. அதேசம​யம், மக்​கள் விரோத திமுக ஆட்​சியை அகற்ற வேண்​டிய பொறுப்பு எல்​லோருக்​கும் உள்​ளது. இதில் எல்​லோரும் உறு​தி​யாக இருந்து திமுக-வை வேரறுக்​கப் போகி​றோமா அல்​லது உதிரி​யாக இருந்து திமுக வெற்றி பெற அனு​ம​திக்​கப் போகி​றோமா என்​பது குறித்து எல்​லோரும் யோசிக்க வேண்​டும்​.

“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்ற உங்களது இலக்கை நோக்கிய பயணத்தில் தமிழக பாஜக எவ்வளவு தூரம் பயணித்துள்ளது? – தமிழக பாஜக-​வில் புதி​தாக 30 லட்​சம் உறுப்​பினர்​களை சேர்த்​துள்​ளோம். கட்சி கட்​டமைப்​பு​கள் முழு​மை​யாக மாற்​றியமைக்​கப்​பட்​டு, விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. தேர்​தல் மூலம் கிளை முதல் மாவட்​டம் வரை நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்​கள். மண்டல வாரி​யாக பொதுக்​கூட்​டங்​களை நடத்த தொடங்​கி​யுள்​ளோம். மத்​திய அமைச்​சர்​களை வரவழைத்து தமி​ழ​கத்​தில் உள்ள பிரச்​சினை​களை தீர்க்க நடவடிக்கை எடுக்க உள்​ளோம். மத்​தி​யிலும் மாநிலத்​தி​லும் ஒரே கட்​சி​யின் ஆட்​சி, அதாவது எங்​கள் கருத்​துப்​படி, டபுள் இன்​ஜின் அரசு தமி​ழ​கத்​தில் விரை​வில் அமை​யும்​.

மீண்டும் மாநிலத் தலைவர் பதவிக்கு வரும் எண்ணம் உண்டா? – 25 ஆண்டு கால பாஜக-​வின் பணி​யில் மாநில தலை​வ​ராக, ஆளுந​ராக பணி​புரிந்​துள்​ளேன். இந்த அனுபவங்​கள் கட்​சிக்கு பலன் தர வேண்​டும் என்ற நோக்​கில் உழைக்​கிறேன். ஆளுநர் பதவியை விட்​டு​விட்டு வரு​வது என்​பது ஒரு சுலப​மான முடிவு அல்ல. என் உழைப்பு கட்​சிக்​காக, தமிழக மக்​களுக்​காக பயன்பட வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் அந்த முடிவை எடுத்​தேன்.

தலை​வர் பதவியை பொறுத்​தவரை, கட்​சிக்கு என்று ஒரு வழி​முறை இருக்​கிறது. அதை நான் அப்​படியே பின்​பற்​று​வேன். கட்சி என்ன பொறுப்பு கொடுத்​தா​லும் அதற்​காக நான் கடுமை​யாக உழைப்​ப​தற்கு தயா​ராக இருக்​கிறேன். இப்​போது உள்ள தலை​வர் கடுமை​யாக உழைக்​கி​றார். யாரை தலை​வ​ராக கட்சி முன் நிறுத்​தி​னாலும், அவர்​களு​டன் இணைந்து பணி​யாற்ற தயா​ராக இருக்கிறோம்​.



By admin