• Fri. May 23rd, 2025

24×7 Live News

Apdin News

அசாம்: ஆயிரம் பேர் துரத்தி சென்று கொல்லப்பட்ட புலி – பாகங்களை எடுத்து சென்றனர்

Byadmin

May 23, 2025


இன்றையச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கப்புலி (சித்தரிப்புப் படம்)

இன்றைய (23/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் சுமார் 1000 பேர் சேர்ந்து ஒரு புலியை கொலை செய்து அந்த புலியின் உடல் பாகங்களை வெற்றிச் சின்னங்களாக அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள துசிதிமுக் கிராமத்தில் ஓர் ஆண் ராயல் பெங்கால் புலியை (வங்கப்புலி) அப்பகுதியை சேர்ந்த 1,000 பேர் சேர்ந்து கொலை செய்து அதன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அந்த புலி கடந்த சில வாரங்களில் ஒருவரை தாக்கிக் கொலை செய்ததாகவும், கால்நடைகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திகள், ஈட்டிகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றுடன் இருந்த கிராமத்தினர் ஒரு வனப்பகுதிக்குள் புலியை துரத்திச் சென்று, வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள்ளாக அந்த புலியை கொன்றதாக அச்செய்தி கூறுகிறது.

By admin