• Sat. Jan 24th, 2026

24×7 Live News

Apdin News

அடர் வனத்தில் தனியே வசிக்கும் குடும்பம் – வெளியாட்களை கண்டால் ஓடி ஒளியும் குடும்பத்தலைவர்

Byadmin

Jan 24, 2026


கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் என அந்த குடும்பத்தில் மூவர் மட்டுமே உள்ளனர்.
படக்குறிப்பு, இன்றைய அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போன தொலைபேசி மற்றும் மின்சார வசதிகள் அங்கு கிடையாது.

    • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக

தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தின் அஸ்வராவ்பேட் மண்டலத்தில் உள்ள ஒரு உயரமான மலையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் மூன்று பேர் கொண்ட ஒரு பழங்குடி குடும்பம் கடந்த ஆறு ஆண்டுகளாக வசித்து வருகிறது.

கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் என அந்த குடும்பத்தில் மூவர் மட்டுமே உள்ளனர்.

மலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் கீழே நடந்து வந்தாலும் கூட, அங்கே ஒரு மனித நடமாட்டத்தைக் கூட காண முடியாது.

இன்றைய அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப்போன தொலைபேசி மற்றும் மின்சார வசதிகள் அங்கு கிடையாது. இருப்பினும், அவர்கள் அப்படியே வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மூன்று பேரும் ஏன் அங்கே தங்கியிருக்கிறார்கள்? அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஆறு வருடங்களாக காட்டை விட்டு வெளியேறாத அவர்களைப் பற்றி அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

By admin