• Tue. Apr 29th, 2025

24×7 Live News

Apdin News

அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்யப் போகும் கார்டினல்கள் யார்? என்ன செய்வார்கள்?

Byadmin

Apr 29, 2025


வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் உடலுக்கு கார்டினல்கள் அஞ்சலி செலுத்தினர். அவர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, சிவப்பு தொப்பிகள் மற்றும் சிலுவைகளை அணிந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகெங்கிலும் உள்ள கார்டினல்கள் அடுத்த போப்பை தேர்ந்தெடுக்க வாடிகன் நகரில் உள்ள ஐந்து மாடி விருந்தினர் மாளிகையான காசா சான்டா மார்ட்டாவில் ஒன்று கூடுவார்கள்.

போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் சமீபத்தில் இறந்ததையடுத்து, சனிக்கிழமையன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள கார்டினல்கள் விரைவில் வாடிகனில் கூடி அடுத்த போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

ரகசியமான, பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்தச் செயல்முறை, ‘கான்கிளேவ்’ என்று அழைக்கப்படுகிறது. அடுத்த போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிக்கவுள்ள கார்டினல்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய அரசியல் மாற்றங்கள் அவர்களின் முடிவில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

யாரெல்லாம் வாக்களிக்க தகுதியானவர்கள்?

கார்டினல்கள் கல்லூரியில் தற்போது 252 கார்டினல்கள் உள்ளனர். அவர்களில் 135 பேர் 80 வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே அவர்கள் புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

By admin