இந்நிலையில், இந்த குழுமத்துக்கு ரூ.97 கோடியில் அண்ணா நகரில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இக்கட்டிடம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 19,008 சதுர அடி கொண்ட இடத்தில் ரூ.77.60 கோடி செலவில், 56 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டது.
மேலும், ரூ.19.49 கோடி செலவில் இக்கட்டிடத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்களுக்கான தகவல் மையம், வாகனம் நிறுத்துமிடம், வரவேற்பறை, காத்திருப்பு அறை, மின்தூக்கி வசதி, நவீன குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.