• Fri. Jun 6th, 2025

24×7 Live News

Apdin News

அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் மேலும் ஒரு குற்றச்சாட்டு – முந்த்ரா துறைமுகத்தில் என்ன நடந்தது?

Byadmin

Jun 5, 2025


 கௌதம் அதானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி

இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் நிறுவனங்கள், முந்த்ரா துறைமுகம் வழியாக இரானிய திரவ பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) இந்தியாவிற்கு இறக்குமதி செய்தாரா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருவதாக, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற அமெரிக்க செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் அதானி எண்டர்பிரைசஸ், இந்த அறிக்கையை “ஆதாரமற்றது” என்று கூறி மறுத்துள்ளது.

“இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறித்து எங்களுக்குத் தெரியாது” என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கும், பாரசீக வளைகுடாவுக்கும் இடையில் பயணித்த சில சரக்கு கப்பல்களின் நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் கப்பல்கள் வழக்கமாக பயன்படுத்துவதை ஒத்ததாக இருந்தது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இவை, தடையில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

By admin