தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு இன்று முடிவு செய்யப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதில் பாமக , அமமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் இடம்பெற்றன.
இந்த கூட்டத்தின் முடிவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது.
இதன்படி கூட்டணியில்
பாஜகவுக்கு – 27 தொகுதிகள்
பாமகவுக்கு – 18 தொகுதிகள்
அமமுகவுக்கு – 11 தொகுதிகள்
ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பட மூலாதாரம், @EPSTamilNadu/X
கடந்த சில வாரங்களாகத் தொகுதிப் பங்கீடு குறித்து நடந்த பேச்சுவார்த்தைகளை தொடந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
தொகுதி பங்கீடு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “இன்னும் எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும்” என்று கூறினார்.