• Wed. Apr 2nd, 2025

24×7 Live News

Apdin News

அதிமுக: செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு பரிசீலனையா? டாப்5 செய்திகள்

Byadmin

Mar 31, 2025


செய்திகள்

பட மூலாதாரம், @KASenkottaiyan

இன்றைய தினம் (31/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருப்பதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் உள்ளார். சமீபத்தில் செங்கோட்டையனுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகின்றது. இந்தச் சூழலில், பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என கூறிவந்த பழனிசாமி, திடீர் பயணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி அன்று செல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதன் பிறகு கூட்டணி குறித்து பல விவாதங்கள் எழுந்தன”, என்கிறது அந்த செய்தி.

மேலும், “இதற்கிடையில் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது. அதிமுக கூட்டணிக்கு வராவிட்டால், செங்கோட்டையனை வைத்து கட்சியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது”, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin