• Tue. Dec 23rd, 2025

24×7 Live News

Apdin News

அனுராக் திவேதி: சைக்கிளில் இருந்து சூப்பர் காருக்கு உயர்ந்த யூடியூபர் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியது எப்படி?

Byadmin

Dec 23, 2025


அனுராக் திவேதி

பட மூலாதாரம், X/@AnuragxCricket

படக்குறிப்பு, தான் ஒரு காலத்தில் டாடா மேஜிக் வாகனத்தில் பள்ளிக்குச் சென்றதாக ஒரு பாட்காஸ்டில் அனுராக் தெரிவித்திருந்தார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த யூடியூபரும், தன்னைத்தானே ஃபேண்டஸி கிரிக்கெட் நிபுணர் என்று கூறிக்கொள்பவருமான அனுராக் திவேதியின் வேகமாக மாறிய வாழ்க்கை முறை இப்போது அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.

டிசம்பர் 17 அன்று, உன்னாவ் மாவட்டத்தின் நவாப்கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த நடவடிக்கையின் போது, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், யூடியூபரும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சருமான அனுராக் திவேதியின் லக்னோ, உன்னாவ் மற்றும் டெல்லியில் உள்ள 10 இடங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையின் கூற்றுப்படி, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத் தளங்களை விளம்பரப்படுத்துவதில் அனுராக் திவேதி முக்கியப் பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

By admin