• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

அன்பான ஆக்ரோஷம்: குழந்தைகளை பார்த்தவுடன் ‘கொஞ்ச’ வேண்டுமென்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

Byadmin

Sep 18, 2025


உளவியல், மனித மனம், உணர்வுகள், அன்பு, அழகு, குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நமது மூளை எவ்வாறு தீவிரமான அன்பை/அழகை கையாளுகிறது என்பதற்கான ஒரு வெளிப்பாடுதான் இது.

எங்களது பூனைக்குட்டியைப் பார்த்தவுடன் என் மகனின் முகம் பிரகாசமாக மாறுகிறது, அவன் அந்த பூனைக்குட்டியை சற்று இறுக்கமாகவே அணைத்துக்கொள்கிறான். அவ்வளவு இறுக்கமாக அணைக்க வேண்டாம் என பலமுறை அவனிடம் சொன்னாலும், அந்த பஞ்சுபோன்ற உயிரினத்தைப் பார்த்ததும் அவ்வாறு செய்ய வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு எழுகிறது.

இது குறும்பு அல்ல, அதேசமயம் பூனைக்குட்டியைக் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அவனுக்கு இல்லை. இது ஒரு தீவிரமான உணர்ச்சியின் வெளிப்பாடு.

என் மகனுக்கு 14 வயது, ஆனால் ஆவேசமாகக் கட்டிப்பிடிப்பது அல்லது அழகான விஷயங்களை இறுக்கமாக அணைப்பது/கையாள்வது என்ற தன்னிச்சையான தூண்டுதல் எல்லா வயதினரிடமும் பொதுவானது.

எனக்கு 30 மற்றும் 40 வயதுடைய சக ஊழியர்கள் உள்ளனர், அவர்களும் இதே உணர்வை ஒப்புக்கொள்கிறார்கள்.

By admin