• Thu. Jun 26th, 2025

24×7 Live News

Apdin News

அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் ராணுவ மேஜர் மரணம் – என்ன நடந்தது?

Byadmin

Jun 26, 2025


சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், ISPR

படக்குறிப்பு, சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா

பாகிஸ்தான் ராணுவ மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா, ராணுவ நடவடிக்கை ஒன்றில் உயிரிழந்தார். பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சரரோகா பகுதியில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது அவர் உயிரிழந்தார்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை, ராணுவ அதிகாரி மோயிஸ் ஷா சிறைபிடித்தார். அவரின் இறுதி அஞ்சலி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர் துறையின்(ஐ.எஸ்.பி.ஆர்) தகவல்களின்படி, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மோஹ்சின் நக்வி ஆகியோர் அந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.

‘பணியில் இருந்த மேஜர், வீரத்துடன் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். வீரம், தியாகம் மற்றும் நாட்டுப்பற்றுக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாக அவர் மாறியுள்ளார்’ என்று இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற முனீர் குறித்து பேசியதாக ஐ.எஸ்.பி.ஆர் கூறுகிறது.

By admin