• Wed. Mar 12th, 2025

24×7 Live News

Apdin News

அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அண்ணாதுரை சொல்வது என்ன?

Byadmin

Mar 12, 2025


அப்பா ராவ்

பட மூலாதாரம், HANDOUT

சிவகங்கை மாவட்டத்தில் தேநீர் அருந்துவதற்காக ரயிலில் இருந்து இறங்கிய கொனேரு அப்பாராவ், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கொத்தடிமை நிலையில் இருந்து மீட்கப்பட்டார்.

பல்வேறு கட்ட தேடுதலுக்குப் பின்னர், அப்பாராவின் உறவினர் பற்றி சில துப்புகள் கிடைத்திருக்கும் போதிலும், தகவல்களைச் சரிபார்க்கும் பணி தொடர்வதால் அப்பாராவ் வீடு திரும்புவதில் இன்னும் சிக்கல் தொடர்கிறது.

கொனேரு அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் வழியாக பாண்டிச்சேரிக்கு வேலைக்காகப் பயணம் செய்தார். அப்போது 40 வயதாக இருந்த அவர், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தேநீர் அருந்துவதற்காக ரயிலில் இருந்து இறங்கிவிட்டு மீண்டும் ஏறுவதற்கு முன்பாக ரயில் புறப்பட்டது.

அண்ணாதுரை என்பவர், அவரை சம்பளமில்லாமல் 20 ஆண்டுகளாக வேலை வாங்கியது தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை நடத்திய கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கையில் தெரிய வந்தது. அப்பாராவ் கொடுக்கும் தகவல்களை வைத்து அவரின் சொந்த கிராமத்தையும், குடும்பத்தையும் தேடும் பணி இப்போதும் தொடர்ந்து வருகிறது.

By admin