• Fri. Oct 10th, 2025

24×7 Live News

Apdin News

அமிர்கான் முத்தாகி: இந்தியாவில் தாலிபன் தலைவர் – ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரின் பயணம் ஏன்?

Byadmin

Oct 10, 2025


முதல் முறையாக வெளியுறவு அமைச்சராக அமிர்கான் முத்தாகி  இந்தியா வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் முறையாக வெளியுறவு அமைச்சராக அமிர்கான் முத்தாகி இந்தியா வருகிறார்.

இந்தாண்டு ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள அமிர்கான் முத்தாகி இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியை துபையில் சந்தித்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு பொறுப்பேற்ற பிறகு இருநாடுகள் இடையே நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை இது ஆகும்.

ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தபோது அமிர்கான் முத்தாகி கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து மே மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முத்தாகி இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. தற்போது 5 மாதங்களுக்குப் பிறகு இருவரும் டெல்லியில் சந்திக்கின்றனர்.



By admin