• Wed. Nov 19th, 2025

24×7 Live News

Apdin News

அமூர் ஃபால்கன்: ஓரிடத்தில் கூட நிற்காமல் சுமார் 5 நாளில் 5,400 கிமீ பறப்பது எப்படி?

Byadmin

Nov 19, 2025


5 நாட்களில் 5,400கி.மீ இடைவிடாமல் பறந்த அமூர் வல்லூறுகளின் அதிர வைக்கும் கடல் பயணம்

பட மூலாதாரம், Getty Images

இயற்கை உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பறவைகளின் வலசை. கடல் கடந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து செல்லும் அவற்றைக் காண பறவை ஆர்வலர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலங்களுக்கு ஆவலுடன் செல்வது வழக்கம்.

அப்படி வரும் வலசைப் பறவைகளின் பயணப் பாதைகளை, பயணிக்கும் தொலைவை, ஓய்வெடுக்கும் இடங்களைக் கண்டறியும் முயற்சிகளை பறவை ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர்.

அத்தகைய ஒரு முயற்சியாக, இந்திய காட்டுயிர் நிறுவனம் (WII), மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தை முன்னெடுக்கிறது. அந்தத் திட்டத்தின் இரண்டாம் நிலையில், மூன்று அமூர் வல்லூறுகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி ரேடியோ பட்டைகளை அணிவித்து, அவற்றின் பயணத்தைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

அப்பபாங், அலாங் எனப் பெயரிடப்பட்ட இரண்டு ஆண், அஹு எனப் பெயரிடப்பட்ட ஒரு பெண் என மூன்று அமூர் வல்லூறுகள் இந்த ஆய்வில் பங்கெடுத்தன. அவற்றில் ஒன்றான அப்பபாங், “5 நாட்கள் மற்றும் 15 மணி நேரத்தில்” 5,400 கி.மீ தூரம் ஓய்வின்றிப் பயணித்து சோமாலியாவை அடைந்திருப்பதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை செயலாளர் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமூர் வல்லூறுகள் நாளொன்றுக்கு சுமார் 1000 கிலோமீட்டர் வரை பறக்கக் கூடியவை என்றும் எங்குமே தரையிறங்காமல் நாள்கணக்கில் பறந்து வலசைப் பயணத்தை முடிக்கக் கூடியவை என்றும் கூறுகிறார் இந்தத் திட்டத்தை வழிநடத்துபவரும், இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் சுரேஷ் குமார்.

By admin