24
அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறி, இன்னும் நிரந்தர குடியுரிமை பெறாத அகதிகளை கைதுசெய்யும் வகையில் டிரம்ப் நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் கீழ், பல்லாயிரக்கணக்கான அகதிகள் கைது செய்யப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதன்படி, குடியேற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் நிலையில், நாட்டுக்குள் வந்து ஓராண்டுக்கு மேலாகியிருந்தால், அவர்களை காவலில் எடுக்க அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு வழிவகுக்கிறது. மேலும், விண்ணப்ப நடைமுறைகள் முழுமையாக நிறைவேறும் வரை, அவர்கள் கட்டாயமாக காவலில் வைத்திருக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால், பைடன் நிர்வாக காலத்தில் அமெரிக்காவில் குடியேறிய 2 இலட்சத்திற்கும் அதிகமான அகதிகளிடையே கடும் அச்சமும் குழப்பமும் நிலவி வருகிறது.