அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் – பீதியடைந்த நாய்கள் செய்த செயல்
அமெரிக்காவில் நிலநடுக்கத்தால் வீட்டிற்குள் இருந்த நாய்கள் பயந்து அங்கும் இங்கும் ஓடின. இந்த காட்சி அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவானது.
அமெரிக்காவின் சான் டியேகோ அருகே கடந்த திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் மையம் தெரிவித்தது. அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் காயம் இல்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.